சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சித்ராவின் மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக நசரேத்பேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். அத்துடன் ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குநர், தயாரிப்பாளர், விடுதியின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருந்தனர்.

தற்கொலை தொடர்பாக கடந்த 6 நாட்களாக ஹேம்நாத்திடம் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது நாசரேத்பேட்டை போலீஸார் அவரை கைது செய்தனர்.

தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் தாய் விஜயா குற்றம்சாட்டியிருந்தார். சித்ராவின் தற்கொலை வழக்கை போலீஸாரும் , வருவாய் கோட்டாட்சியரும் விசாரித்து வருகின்றனர்.


சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை


தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்த உள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post